இலங்கை

7 பொலிஸ் பிரிவுகளில் கைவரிசையை காட்டிவந்த கும்பல் கைது

பொரலஸ்கமுவ, பிலியந்தலை, கெஸ்பேவ, கஹத்துட்டுவ, ஹொரணை உள்ளிட்ட 7 பொலிஸ் பிரிவுகளில் 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 6 பேரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது மகனும் உள்ளடங்குவதாகவும், ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் பெண்ணொருவரின் நகையை கொள்ளையடித்த போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button