விளையாட்டு
2027 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள்
2024-2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கின்றன. 2025ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் நேபாளத்திலும் போட்டிகள் நடக்கின்றன.