இலங்கைமுக்கியச் செய்திகள்
வேலன் சுவாமிகளுக்கு பிணை | சுமந்திரன் ஆஜர்
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, வேலன் சுவாமிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.
நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற வாதத்தின் அடிப்படையில் வேலன் சுவாமிகள் நீதவானால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.