இலங்கை
வசந்த முதலிகே, சிறிதம்ம தேரருக்கு பிணை
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (6) பிணை வழங்கப்பட்டது.
வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அவர்களை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
எனினும், அவர்கள் தொடர்பான சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறும் வரையில் வசந்த முதலிகேவை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.