இலங்கை

ரின்மீன்கள் வாங்குவோரின் கவனத்திற்கு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின்மீன்களை கொள்வனவு செய்யும் போது எஸ்.எல்.எஸ் என்ற இலங்கை தர நிறுவனத்தின் தரச்சான்று உள்ளவற்றை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

தரமற்ற உற்பத்திகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் இலங்கை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தையில் உள்ள தரமற்ற ரின்மீன்கள் தொடர்பில் நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதற்காக இலங்கை நுகர்வோர் அதிகார சபை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஊடக சந்திப்பில் வைத்தே அதன் தலைவர் அசங்க ரணசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இன்றைய தினமும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற ரின்மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button