இலங்கை
முட்டைக்கு தட்டுப்பாடு?
எதிர்வரும் வருடத்தில் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை மற்றும் கடந்த பருவத்தில் நிலவிய பொருளாதார சிரமங்களினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
ஒரு முட்டை, 50 ரூபாவுக்கு விற்க வேண்டிய நிலையில், தற்போது ஒரு சில வர்த்தக நிலையங்களில் 53 ரூபாவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.