இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் 5 லீற்றர் எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கே இந்த எரிபொருள் அதிகரிப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் அதிகரிப்பு செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button