இலங்கை
மின்வெட்டு குறித்து மின்சக்தி அமைச்சர் முக்கிய அறிவிப்பு
இரவுநேர மின்வெட்டு தொடர்ந்தும் அமுலாக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில்
தற்போது பகலில் 1 மணி நேரமும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது.
அத்தோடு, சுற்றுலா பிரதேசங்களுக்கு இரவுநேர மின் வெட்டிலிருந்து விதிவிலக்களிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், டிசம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் இரவுநேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படுவதோடு க்றிஸ்ட்மஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிதத்துள்ளார்.