மனிதர்களை பிடிக்கும் சனி என்னென்ன?
ஏழரைச் சனி என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும்.
மங்கு சனி :
இளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் அடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர். மிக முக்கியமாக இந்த காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் கிடைக்கவே செய்கிறது.
பொங்கு சனி :
வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனி ஆகும். ஜாதகரின் இதர கிரக அமைப்புகளை பொறுத்து இதன் ஆட்சி அவ்வளவு கடுமையாக இல்லாமல் சற்று கூடக்குறைய இருக்கும். ஒரு சிலருக்கு பொங்கு சனி விடைபெறும் போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து விட்டு செல்லும். ஏழரைச் சனியின் நடுப்பகுதி கொஞ்சம் சவாலான நேரம். இது பொங்கு சனி காலமாக இருந்தாலும் முறையான பரிகாரங்கள் செய்யாவிட்டால் படுத்தி எடுத்துவிடும்.
மரணச்சனி :
இந்த சுற்றில் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் உடல் நலிவு ஏற்படுத்தும் மற்றும் மரணத்திற்கு இணையான துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும்.