சினிமா

புதிய சீரியலில் மீண்டும் நடிக்க வரும் செம்பருத்தி கார்த்திக் ராஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் கார்த்திக் ராஜ். இதன்பின், அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்க மிகமுக்கியமான காரணமாக இருந்த சீரியல் செம்பருத்தி தான். ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் தான் இவருக்கு முன்னணி சின்னத்திரை நட்சத்திரம் எனும் அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

ஆனால், தீடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகினார். மீண்டும் எப்போது கார்த்திக் ராஜ் சீரியலில் நடிக்க வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் கார்த்திக் ராஜ்.

100 சதவீதம் இது உறுதியாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button