இலங்கை
பிரபாகரனின் பூர்வீக இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஜனனதினம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வுப் பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தை சிரமதானம் மூலம் துப்புரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர்.
இராணுவததின் தடைகளை மீறி துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , துப்புரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து , அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.