இலங்கை
பால்மா இறக்குமதியை குறைப்பதற்கு நடவடிக்கை
இறக்குமதி செய்யப்படும் பால்மாவை சார்ந்திருப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குழுவொன்றை நியமித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.