இலங்கை

பாணுக்கு விலைச்சூத்திரம்

வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

உலக சந்தையில் நிலவும் கோதுமையின் விலை, தேசிய சந்தையில் நிலவும் கோதுமையின் விலை மற்றும் உற்பத்தி செலவீனம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்தை உருவாக்குமாறு அந்த சங்கம் கோரியுள்ளது.

இந்த நிலையில், நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையானது காலத்திற்கு ஏற்ற கோரிக்கை என நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த கிரியெல்ல தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button