இலங்கை

பாடசாலை உபகரணங்கள் பயிற்சி புத்தகங்கள் 300 வீதத்தால் அதிகரிப்பு

பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

10 ரூபாவுக்கு விற்கப்பட்ட பென்சில் 40 ரூபா என்றும், பேனா 30 ரூபா என்றும், 55 ரூபாவுக்கு விற்கப்பட்ட பயிற்சிப் புத்தகம் 120 ரூபா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் 1,200 ரூபாவாக இருந்த பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் போத்தல்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமல்ல, வண்ண பென்சில்கள், பென்சில் பெட்டிகள் போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button