சினிமா
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் படைப்பாய் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பை தாண்டி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
உலகளவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 150 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.