உலகம்

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தெரிவித்த விர்ஜீனியா பல்கலைக்கழக பொலிஸார். தாக்குதல் நடத்தியவரை தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் குறித்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என விர்ஜீனியா பல்கலைக்கழக நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளதோடு. பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கபபடும் குற்றவாளியான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ்ஸின“ புகைப்படத்தை பொலிஸார்  வெளியிட்டுள்ளதோடு குறித்த நபரை பொலிஸார்  தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button