ஆன்மிகம்
நவராத்திரி நாட்களில் அகண்ட தீபம் ஏற்றுங்கள்
நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றைதவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினிபூஜை, கன்யா பூஜைஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.
வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளைசெய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவேநமதுமுன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர்.
அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.