கோயில்கள்

தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு மாசிமக உற்சவம் இன்று (06) காலை நடைபெற்றது.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மாசிமக விசேட உற்சவம் இன்று திங்கட்கிழமை (06.03.2023) காலை நடைபெற்றது.

அதிகாலை 05.30 மணியளவில் உஷக் காலப் பூசை ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் மாசிமகத் தீர்த்தம் இடம்பெற்றது காலை-07 மணியளவில் காலைச் சந்திப் பூசை, கும்ப பூசை, திரவியாபிஷேகம் என்பன இடம்பெற்று காலை-09.30 மணியளவில் அபிஷேகமும் நடைபெற்றது

முற்பகல்-10.30 மணியளவில் ஸ்வர்ணபத்ம புஸ்பார்ச்சனையைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் சிறிய தேரில் எழுந்தருளி உள்வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button