உலகம்
டெல்லியில் நிலநடுக்கம்; ரிச்டர் அளவில் 5.4 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று (12) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வானது ரிச்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் இரண்டாவது முறையாகவும் இவ்வாறு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை, நேபாளத்தில் 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி, காசியாபாத், குருகிராம் மற்றும் லக்னோ உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.