இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த மஹிந்த!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மகிந்த ராஜபக்ஷ நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் பெசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்துள்ளமையானது கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button