இலங்கை
சுதந்திரக் கட்சியின் அவசர கூட்டம் இன்று!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.