இலங்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு நோய்க்காக வரும் வெளி நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இன்மையால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் மாதாமாதம் மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.