இலங்கை
கொழும்பில் அவசரமாக ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்
தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.
இதில், தேசிய மக்கள் சக்தியைத் தவிர எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
முன்னணி சோசலிசக் கட்சியும் இந்த கலந்துரையாடலில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.