இலங்கை
கதிர்காம ஆலயத்திற்கு செல்வோருக்கான அறிவிப்பு
மாணிக்ககங்கை ஊற்றெடுக்கும் பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்துவருவதன் காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பியுள்ளதால் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒரு வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக மாணிக்ககங்கையின் தாழ்வான பகுதி நீரால் நிரம்பியுள்ளதால், கதிர்காம ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களும் பிரதேசவாசிகளும் மாணிக்ககங்கையை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.