இலங்கை

எரிபொருள் நிலைய மோசடிகள் தொடர்பில் 200 முறைப்பாடுகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாடிக்கையாளருக்கு உரிய முறையில் எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 60 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் மாதிரிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 எரிபொருள் மாதிரிகள் சாந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எரிசக்தி அமைச்சு, எடை மற்றும் அளவீடுகள் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button