கோயில்கள்

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (30.05.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 16 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.

இவ் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் அடுத்தமாதம் 12.06.2023 திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 13.06.2023 செவ்வாய்க்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும் மறுநாள் 14.06.2023 புதன்கிழமை காலை-09.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button