உலகம்

இராணுவத்தில் இணைவதற்கு வெளிநாட்டினருக்கு சந்தர்ப்பம் வழங்கும் கனடா

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது.

இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே இராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர்.

தனிநபர்களுக்கான இந்த திட்டம், பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது மருத்துவர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் எளிதில் சேரலாம்.

அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் இராணுவத்தில் இணையலாம். இராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button