இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் பல துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு வாரம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கொழும்பில் கலந்து கொண்ட ஒன்றிணைந்த சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், இன்று முதல் பல துறையின் சேவைகள் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button