இலங்கை
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பகல் உணவு
நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஜனவரி மாதம் முதல் பகல் உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையைப் போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லையென தெரிவித்த கல்வி அமைச்சர் இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.