அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் 29,30 மற்றும் 31 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டுப் பட்டியலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையி்ல், சனி (29) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (30) 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்தோடு 31 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
குறித்த மின்வெட்டு பட்டியல் பின்வருமாறு:
ஒக்டோபர் 29, 30 ஆம் திகதிகள்,
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளில், 1 மணி நேரம் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
ஒக்டோபர் 31 ஆம் திகதி,
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளில் பகலில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம்